×

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 365 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி!

ஹைதராபாத்: உலகக்கோப்பை தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து, வங்கதேச அணியையும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணியையும் எதிர்கொள்கிறது.

முதல் போட்டியில் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டேவிட் மாலன் 140 ரன்களும், ஜோ ரூட் 82 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 52 ரன்களும் குவித்தனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியான துவக்கத்தை கொடுத்தனர். பேர்ஸ்டோவ் மற்றும் மாலன் ஜோடி இணைந்து முதல் விக்கெட்டிற்கு 115 ரன்களை சேர்ந்தது. பேர்ஸ்டோவ் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஷாகிப் ஓவரில் போல்டானார்.

அடுத்து களமிறங்கிய ரூட், மாலன் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடி வந்த டேவிட் மாலன் 140 ரன்கள் எடுத்து மகேதி ஹசன் ஓவரில் அவுட் ஆனார். அவரையடுத்து களமிறங்கிய பட்லர் 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். 307 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோ ரூட் தனது விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்காத காரணத்தால் 400 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசி மகேதி ஹசன் 4 விக்கெட்டுகளையும், ஷோரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

The post வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 365 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி! appeared first on Dinakaran.

Tags : England ,Bangladesh ,Hyderabad ,World Cup ,Dinakaran ,
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்